யாருக்கு சூப்பர்.. யாருக்கு சுமாரான நாள்.! இன்றைய (13-03-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். பரிசுகள் கிடைக்கும் நாள். 

ரிஷபம்

உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எதிர்காலம் நிமிர்த்தமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.  புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். உத்தியோக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

கடகம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் கனிவுடன் நடந்து கொள்ளவும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார அபிவிருத்திக்கான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் நிர்வாக திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.

துலாம்

செய்கின்ற முயற்சிகளில் புதிய நுணுக்கங்களை அறிவீர்கள். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.  மேன்மை நிறைந்த நாள்.

தனுசு

எண்ணிய சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடம்  சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சிறு மற்றும் குறு தொழிலில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

கும்பம்

இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 13.03.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->