புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள், இப்படித்தான் இருப்பார்கள்..!! - Seithipunal
Seithipunal


புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்கள். சிறுவயதிலேயே நூல்களைப் புரட்டிப் படிப்பார்கள். புரட்டாசியில் பிறந்த இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள்.

இவர்கள் அரியவகை நூல்களைச் சேகரிப்பார்கள். விரைவில் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காத மேதைகளாகவும், படித்த பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குவார்கள். 

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு: 

தன் உழைப்பினாலும், திறமையினாலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார்கள். காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பார்கள். இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும். இவர்கள் மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சாமர்த்தியசாலிகள்.

பெருமாள், புரட்டாசி, புரட்டாசி மாதம்,

ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள். எதையும் திறம்படச் செய்யவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள். மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தெரியும், அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக்கூறி விடுவார்கள்.

பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்குவழிகளைக் கடைபிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள். நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வதைத் திருந்தச் செய்வார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

purattasi month birth persons characteristics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->