வீட்டில் தினமும் பூஜை செய்கிறீர்களா? அப்போ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஸ்லோகம்..!
Pooja Sloken
பூக்களை கொண்டு இறைவனை பூஜிக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாம் இறைவனை பூஜை செய்யும் போது மலர்களை கொண்டு நாம் பூஜை செய்வோம். ஒவ்வொரு மலருக்கும் தனி தனி மணம் இருப்பது போல ஒவ்வொரு மலரை கொண்டு பூஜை செய்யும் போது வெவ்வெறு பலன்கள் கிடைக்கும். பூக்களை கொண்டு பூஜை செய்யும் போது நாம் புஷ்பாஞ்சலி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
பிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது பூக்கள் மலர்வது போல நமது வாழ்க்கையும் மலரும் என்பது நம்பிக்கை.