திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: வைகுண்ட ஏகாசித் திருவிழா – டிசம்பர் 30-ல் சொர்க்கவாசல் திறப்பு!
chennai parthasarathy temple Vaikunta Ekadasi
108 வைணவத் திருத்தலங்களில் பழமையானதும், ஐந்து திவ்ய தேச எம்பெருமான்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கும் சிறப்புமிக்கதுமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், இந்த ஆண்டு வைகுண்ட ஏகாசித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
ஐந்து நிலைகளில் பெருமாள்:
இக்கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணனாகவும், இருந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும், கிடந்த கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும் சேவை சாதிப்பது தனிச்சிறப்பு.
முக்கிய விழா விவரங்கள்:
பகல்பத்துத் தொடக்கம்: டிசம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. நாள்தோறும் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுவார்.
சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு: டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறும்.
தரிசன நேரம்: காலை 5.30 முதல் 10.30 மணி வரை பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
வீதி உலா: இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி, நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும்.
இராப்பத்து மற்றும் நீராட்டு உற்சவம்:
டிசம்பர் 31 முதல் ஜனவரி 9-ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடைபெறும். இதில் ஜனவரி 7-ம் தேதி வரை மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் சேவை உண்டு. மேலும், ஜனவரி 6 முதல் 14-ம் தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெறும்.
English Summary
chennai parthasarathy temple Vaikunta Ekadasi