இன்றைய ராசி பலன்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட திசை.. எண்.. என்ன? - Seithipunal
Seithipunal


மேஷம்:

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளால் லாபம் அடைவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். காணாமல் போன ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். லாபம் மேம்படும் நாள்.

மிதுனம்:

வியாபாரம் நிமிர்த்தமான புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் நீங்கும்.  மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

கடகம்:

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். துணிவு நிறைந்த நாள்.

சிம்மம்:

பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட விவாதங்கள் நீங்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கன்னி:

வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவி கிடைக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.

துலாம்:

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றம் செய்வீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். புரிதல் மேம்படும் நாள்.

விருச்சிகம்:

உத்தியோகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் வேகமின்றி செயல்படவும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.

தனுசு:

சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விருப்பம் நிறைந்த நாள்.

மகரம்:

வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். ஆதரவு நிறைந்த நாள்.

கும்பம்:

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

மீனம்:

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 apr rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->