இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.. இன்றைய (22-05-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

ரிஷபம்

எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

மிதுனம்

உலகியல் சார்ந்த செய்திகளின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

கடகம்

வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். மற்றவர்களிடம் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். விவசாயம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

சிம்மம்

செய்யும் தொழிலில் முயற்சிகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். உயர் பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

கன்னி

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உறுதி நிறைந்த நாள்.

துலாம்

நண்பர்களின் வழியில் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை, தாமதங்கள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் போட்டிகளில் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். பணிவு வேண்டிய நாள்.

தனுசு

மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் நிர்வாக திறமையை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதில் தெளிவு உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

மகரம்

மனம் திறந்து பேசுவதன் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

கும்பம்

சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எண்ணங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

மீனம்

இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து கருத்துக்களை பகிரவும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு உண்டாகும். விருப்பம் நிறைவேறும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->