இன்றைய தினப்பலன்கள் (14-10-2022)... சிறப்பான பலன்கள் பெறும் ராசிக்காரர்கள் யார்? யார்? - Seithipunal
Seithipunal


மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாகனம் சார்ந்த பயணங்களால் லாபம் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.

ரிஷபம்

மனதில் புதிய முயற்சிகள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பத்திரிக்கை சார்ந்த தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசைகள் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்

வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சமூக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவினை எடுப்பீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி

உத்தியோக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிர்பாராத சில தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

துலாம்

வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நெருக்கமானவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

தனுசு

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மகரம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நுட்பமான விஷயங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.

கும்பம்

உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் ஏற்படும். கால்நடை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் மேம்படும் நாள்.

மீனம்

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14.10.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->