இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.. இன்றைய (08-09-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுயதொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினை விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ரகசிய செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவமும், அலைச்சலும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருப்தி நிறைந்த நாள்.

சிம்மம்

வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இயந்திரம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

கன்னி

புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாதத்திறமையின் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் கற்பனையான சிந்தனைகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

துலாம்

கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.

தனுசு

இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுகமாக இருக்கக்கூடிய சில எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.

மகரம்

கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

கும்பம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளால் விரயங்கள் உண்டாகும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அனுகூலம் நிறைந்த நாள்.

மீனம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுயதொழில் சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பொன், பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

08.09.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->