இன்றைய தினப்பலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தரப் போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர் வகையில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சில பொறுப்புகள் குறையும். இழுபறியான நாள்.

ரிஷபம்:

காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணி நிமிர்த்தமாக சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

கடகம்:

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டை பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்:

எதிர்பாராத அலைச்சல்களால் சிறு சிறு ஏமாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எண்ணிய பணிகளை சில தடைகளுக்குப் பின்பு நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஊக்கம் வேண்டிய நாள்.

கன்னி:

உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். ஆக்கம் நிறைந்த நாள்.

துலாம்:

முக்கியமான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். கல்வி சார்ந்த பணிகளில் திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.

தனுசு:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வகையில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்:

புதுவிதமான அனுபவத்தால் மனதில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கும்பம்:

நேர்மறை சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.

மீனம்:

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. எண்ணம் ஈடேறும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

08 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->