இன்று சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் - இன்றைய ராசிபலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.

ரிஷபம்:

உத்தியோகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தந்தைவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். மனதில் மாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் மீதான கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சலனம் நிறைந்த நாள்.

மிதுனம்:

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்களும், மந்தமான சிந்தனைகளும் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உருவாகும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகமான நாள்.

கடகம்:

உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

சகோதரர் வகையில் ஆதரவான சூழல் காணப்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.

கன்னி:

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

துலாம்:

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்:

குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வியாபாரம் தொடர்பான முயற்சிகளும் அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

தனுசு:

பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் சேமிப்புகள் குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாக்குவன்மையின் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.

மகரம்:

கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

கும்பம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நிர்வாகம் சார்ந்த திறமைகள் வெளிப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

மீனம்:

சகோதரர் வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். திருப்தியான நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

03 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->