இன்றைய (02-05-2022) ராசி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையப்போகிறது.! - Seithipunal
Seithipunal


மேஷம்

மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நன்மையான நாள்.

ரிஷபம்

பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் தீர்வு கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்

மற்றவர்களை நம்பி இருக்காமல் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நன்மை ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்திகரமான நாள்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் மறைமுகமான லாபம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

சிம்மம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார தலங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதை குறைத்துக் கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்களுக்கு பின்பு ஆதாயம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்பமான நாள்.

துலாம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மற்றவர்களின் நயமான பேச்சுக்களை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சோர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஒற்றுமை நிறைந்த நாள்.

தனுசு

கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். லாபகரமான நாள்.

மகரம்

உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் புதுமையும், தெளிவும் ஏற்படும். ஆக்கம் நிறைந்த நாள்.

கும்பம்

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவு கிடைக்கும் நாள்.

மீனம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். களிப்புகள் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

02.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->