யம்மா சிங்கப்பெண்ணே.. எங்கம்மா இருக்க?.. பாம்பை விரட்டி விரட்டி பிடிக்கும் பெண்.. வைரல் காணொளி.!!
a girl catch snake
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஏனெனில் பாம்புகளை கண்டால் அவ்வுளவு பயம் இருக்கும். இன்றுள்ள ஆண்களில் இருந்து பெண்கள் வரை பாம்பை கண்டால் என்ன, பாம்பு குறித்து பேசினாலே பயம்கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இணையத்தளத்தில் வீடியோ பதிவொன்று வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோ காட்சியில் பெண்ணொருவர் மிகவும் சாதுர்யமாகவும், தைரியத்துடனும் பாம்பை பிடித்து தனது கையிலேயே வைத்துக்கொள்கிறார்.
மேலும், அவரது கைகளில் இரண்டு பாம்புகள் இருப்பதுதான் அதில் உச்சகட்ட அதிர்ச்சி.. காண்போரை மிகவும் பதற்றத்திற்கு உள்ளாக்கிய பெண்மணி, எவ்விதமான பயமும் இல்லாது பாம்புகளை பிடிக்கிறார். இதில் மற்றொரு பாம்பு தப்பி செல்ல நினைக்கியில், அதனை விரட்டி விரட்டி பிடிக்கிறார்.
இந்த விஷயம் குறித்து ஆராய்கையில், இந்த பெண்மணி ஹைதராபாத் நகரை சார்ந்தவர் என்றும், இவர்கள் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவார்கள் என்றும் சமூக வலைத்தளத்தில் கமெண்ட்டுகள் இருப்பது தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil