பெண்ணை வற்புறுத்திய கணவன்..! மறுத்த மனைவி.. துடிதுடிக்க கணவன் செய்த காரியம்..!
murder in kovai
சேலம் அருகே இருக்கும் அல்லிகுட்டை கங்கா புதூர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கு மோகன ஈஸ்வரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இருவரும் நான்கு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
கோவையில் வீடு எடுத்து மூன்று வருடங்களாக இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் நடுவில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோபியுடன் கோபம் கொண்ட மோகனேஸ்வரி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரண்டு மாதங்களாகியும் திரும்பி வராமல் அவர் கடையொன்றில் வேலை பார்க்க ஆரம்பித்தார். அதன் பின்னர் நேற்று இரவு மோகனேஸ்வரி வீடு திரும்பாததால் பதட்டம் ஆகிய அவரது தந்தை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது கங்கா புதூர் அருகே ஒரு பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பதற்றத்துடன் சென்று அங்கே பார்த்த பொழுது அது மோகனேஸ்வரி என்பதை அறிந்து கதறி அழுதுள்ளார். அதன் பின்னர் காவல் துறைக்கு தகவல் கிடைக்க விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பம் நடத்த வருமாறு கூறி அவரை கோபி அழைத்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்து கோபி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.