காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கழுத்தறுத்த நாடக காதலன் - வீடு புகுந்து அரங்கேறிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், கண்ணூர் அருகே காதலை ஏற்க மறுத்ததால், இளம் பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணூர் அருகே விஷ்ணுபிரியா என்ற இளம் பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ஷாம்ஜித் என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஷாம் ஜத்திற்கு விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்படவே, தனது காதலை விஷ்ணு பிரியாவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், விஷ்ணுபிரியா நாம் நண்பர்கள்தான். நான் உன்னை நண்பனாக தான் பார்க்கிறேன். உன்னை காதல்னாவே ஏற்றுக் கொள்ள முடியாது என்று, மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷாம்ஜித், விஷ்ணுபிரியாவை வீடு புகுந்து கழுத்தையும், கைகளையும் கத்தியால் அறுத்து படு கொலை செய்தார். 

தொடர்ந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த ஷாம்ஜித்யை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala yong man kill yong lady kannur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->