இரண்டு மகள்களுக்கு திருமணம் முடித்து., மருமகன்களுடன் முறையற்ற தொடர்பு.! இறுதியில் துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள குண்டூர் பகுதியில் இருக்கும் கணவன் மனைவி., தங்களது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இவர்கள் தம்பதியின் மகள்கள் இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்த நிலையில்., பெண்ணின் மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்களின் பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து., இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., இந்த விஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து., தனது மகளின் எதிர்காலத்தை நினைத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இந்த கண்டிப்பை ஏற்றுக் கொள்ளாத மனைவி தகாத உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில்., ஒரு கட்டத்திற்கு மேல் மனைவியிடம் கூறி பார்த்த கணவர் மனைவியிடம் கூறி பயன் ஒன்றுமில்லை என்று எண்ணி., தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இவரின் தற்கொலை விவரத்தை அறிந்து அவரின் நெருங்கிய உறவினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., நேரடியாக பெண்ணை மற்றும் அவரின் மருமகன்களை சந்தித்து எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயம் மாமியாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதை அடுத்து., இரு மருமகன்களின் உதவியோடு கணவரின் உறவினரை  கொலை செய்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்., தனது கணவரின் கொலைக்கு காரணத்தை கூறி., பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

illegal affair with son in law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->