தீபாவளியன்று கொட்டித்தீர்க்கபோகும் மழை!15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


தென் இந்திய மாநிலங்களில் கிழக்கு திசை காற்று அதிகரித்துள்ளதால், 5-ந்தேதி முதல் பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்காக, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சிகள் மழைக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.

இன்று (வியாழக்கிழமை): தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் மிதமான மழை பெய்யும். மேலும், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
  
நாளையும் (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் (சனிக்கிழமை): தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chance of heavy rain in 15 districts today Information from Meteorological Department


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->