அச்சமற்ற பத்திரிக்கை இல்லையெனில் ஜனநாயகம் இருளில் மாண்டு விடும்...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Without a fearless press democracy will die in darkness Chief Minister MKStalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,'பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவிலான பட்டியலில் இந்தியா 161 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? ' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,"பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவிலான பட்டியலில் இந்தியா 161 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்?
பாஜக ஆட்சி கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சுவதால் செய்தியாளர்களை சிறையில் அடைக்கிறது. ஊழல், உரிமை மீறல்கள் நிகழ்வுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளின் வாயை பாஜக அடைக்கிறது.
அச்சமற்ற பத்திரிகை இல்லையெனில் ஜனநாயகம் இருளில் மாண்டுவிடும், எனவே பத்திரிகை சுதந்திரத்தை காக்க வேண்டும்.நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையை தெரிந்து கொள்ளவும், கேள்வி கேட்கவும் உரிமையுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Without a fearless press democracy will die in darkness Chief Minister MKStalin