கேள்வி! 17 ஆவது மக்களவையில் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்காதது ஏன்...? மோடிக்கு கார்கே கடிதம் - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் எழுதியிருப்பதாவது,"முதல் மக்களவை முதல்16-வது மக்களவை வரை, ஒவ்வொரு அவைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது ஒரு மரபு. ஆனால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, இந்தப் பதவி தொடர்ச்சியாக 2  மக்களவையிலும் காலியாகவே இருக்கிறது.

17-வது மக்களவையின் போது துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது தற்போது நடைபெற்று வரும் மக்களவையிலும் தொடர்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல, மேலும் அரசியலமைப்பின் நன்கு வகுக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும்.

எனவே மக்களவையின் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை மேலும் தாமதமின்றி தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்து தற்போது மக்களிடையே வரவேற்க தக்க விதமாக மாறியுள்ளது . மேலும் இணையத்தில் பலரும் இந்தக் கேள்விக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why was Deputy Speaker not elected 17th Lok Sabha Kharges letter to Modi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->