மேற்கு வங்க தேர்தல் 2026: தேர்தல் முடிவுகள் போலியானவை! மம்தா பானர்ஜி அதிரடி குற்றச்சாட்டு. - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 293 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய நிலவரப்படி, பாஜக 191 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 97 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால் அம்மாநில அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில் அதிரடியான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து போலியான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருவதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் உண்மை நிலவரத்தை மறைத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். பாஜகவின் இந்தத் திட்டமிட்ட சதி (Game Plan) தற்காலிகமானது மட்டுமே என்று அவர் விமர்சித்துள்ளார்.

தங்கள் கட்சி இன்னமும் சுமார் 100 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட மம்தா, 14 முதல் 18 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே, எக்காரணம் கொண்டும் தொண்டர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களை விட்டு வெளியேற வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். "சூரியன் மறைந்த பிறகு முடிவுகள் மாறும்" என்ற அவரது இந்த அறிக்கை திரிணாமுல் தொண்டர்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Bengal Elections 2026 Mamata Alleges Fake Data as BJP Leads in 191 Seats


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->