சோழி முடிந்தது! பொய் கனவு காணும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு ரெடியா இருக்கு...! - எ. வ வேலு
wedge is ready for Edappadi Palaniswami who dreams of lies A V Velu
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெல்வோம் என பகல்கனவு காண்கிறார். அடுத்தாண்டு 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் ''எடப்பாடி பழனிசாமி'', நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதில் எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்ற தமிழக முதல்வரின் கனவு, நிச்சயிக்கப்பட்ட கனவு, வெற்றி பெறுகின்ற கனவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் '200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்' என பொய் கனவு கண்டு வருகின்றார்" என்று தெரிவித்தார்.
இதற்கு உடனிருந்தோர் ஆதரவு அளிக்கும் விதமாக கரகோஷம் எழுப்பினர்.
English Summary
wedge is ready for Edappadi Palaniswami who dreams of lies A V Velu