விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாக தகவல்!
Villupuram rain floods Minister Ponmudi
விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் திருச்சிராப்பள்ளி-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அமைச்சர் பொன்முடி களத்தில் இறங்கி வெள்ள பாதிப்புகளை மதிப்பிடாமல் வாகனத்திற்குள் இருந்து பேசியதாக கூறி சிலர் கற்களை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிலர் அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாகவும் தெரியவந்துள்ளது. அவருடன் வந்த அவரின் மகன் மீதும் சேற்றை வீசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
English Summary
Villupuram rain floods Minister Ponmudi