#Breaking || விக்கிரவண்டியில் பெரும் பதற்றம்.! இரு தரப்பு மோதல்., 3 பேருக்கு அரிவாள் வெட்டு.! போலீஸ் குவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு அனுமதித்த 2 மணி நேரத்தில் மட்டும் மக்கள் பட்டாசு வெடித்து இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி பகுதியில் நேற்று இரவு பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

இதனால் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டும், 4 பேர் காயம் அடைந்துள்ளனர். அரிவாள் வெட்டு விழுந்த நபர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இருதரப்பு மோதலை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் உண்டாகலாம் என்ற சூழ்நிலை உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikravanditwo groups of people fights


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->