திமுகவை சோகத்தில் ஆழ்த்திய மரணம்.. மிகுந்த மனவேதனையில் விஜயகாந்த்.!!
Vijayakanth mourns of Shanmuganathan death
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய கோ.சண்முகநாதன் காலமானார். சுமார் 48 ஆண்டுகாலம் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக சண்முகநாதன் பணியாற்றி இருந்தார். இந்நிலையில், சண்முகநாதன் நேற்று காலமானார்.
இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சண்முகநாதன் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு. சண்முகநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
கலைஞர் அவர்களின் 50 ஆண்டு கால தனி உதவியாளராக பணியாற்றிய திரு. சண்முகநாதன் அனைவருடன் அன்புடன் பழகும் பண்புகொண்டவர்.
என்னுடன் எப்போதும் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டவர். கலைஞர் அவர்களின் நிழலாக வாழ்ந்த திரு. சண்முகநாதன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
Vijayakanth mourns of Shanmuganathan death