விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள: நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி! - Seithipunal
Seithipunal


மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 28) சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தலைவர்கள் அஞ்சலி:
விஜயகாந்தின் நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்குப் பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று மலர்தூவித் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சீமான், திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நலத்திட்ட உதவிகள்:
அன்னதானம்: இந்த நினைவு நாளை முன்னிட்டு கோயம்பேடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

அழைப்பு: இன்றைய குருபூஜை நிகழ்வில் பங்கேற்கத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்தின் நினைவிடத்தில், இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayakanth memorial day 2025


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->