3 தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் - விசிக தலைவர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியை திமுக தலைமை விரைவுப்படுத்தியுள்ளது. 

திமுக கூட்டணியில் ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே எந்த கசப்பும் இல்லை. சுமுகமான முறையில் தீர்வை காண்போம். இந்தியா கூட்டணி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் விசிகவின் முடிவுகள் இருக்கும். திமுகவில் நாங்கள் 3 தொகுதிகளை கேட்கிறோம். 

தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும், திமுக, இந்தியா கூட்டணியில்தான் பயணிப்போம் என்பதில் எந்த மாற்றமுமில்லை. திமுக கூட்டணியில் எங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என நாங்கள் கருதவில்லை.” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vck leader thirumavalavan press meet


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->