#BREAKING || "பானை சின்னம்" ஒதுக்கக்கோரி விசிக அவசர வழக்கு.!! - Seithipunal
Seithipunal


திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறது.

ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதால் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு அளித்திருந்தது.

அதன் மீது இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காததால் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கள் கட்சி ஐந்து மாநிலங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவதால் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK case filed for pot symbol in DelhiHC


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->