20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின்..!
Udhayanidhi Stalin held consultations with a high level committee to provide laptops to 2 million college students
2025 - 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேரு நடைபெற்றது.
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து கொண்டார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:-
-2rp9e.png)
கல்லூரி பயிலும் மாணவர்களை திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கிடவும், அவர்கள் உயர்கல்வி கட்டாயம் பயில்வதை உறுதி செய்திடவும் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்தார்.
அத்துடன், 2025 - 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, தொழில் நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் மடிக்கணணிகளை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin held consultations with a high level committee to provide laptops to 2 million college students