பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: வாக்களித்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் சட்டமன்றத்தேர்தலில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் வாக்களிக்க வந்த போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சோனா சிங் மற்றும் மோனா சிங் இருவரும் வாக்களித்துள்ளனர். 

இவர்கள் இருவரும் டெல்லி மருத்துமனையில் இரட்டையர்களாக பிறந்ததும் அவர்களது பெற்றோர்களால் கைவிடப்பட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் ஒரு அனாதை இல்லத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் முதல் முறையாக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வாக்களித்தனர்.

மேலும், இவர்கள் வாக்களிக்கும் போது இவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. வாக்களிக்கும் போது ரகசியத்தை பாதுகாக்க இவர்களுக்கு கண்ணாடிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twins vote in Punjab Assembly election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->