தவெக மாவட்ட செயலாளர் தலைமறைவு! போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
TVK Namakkal Sathish TN Police Karur incident
நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் தலைமறைவானதால், அவரை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 27 அன்று நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, சதீஷ்குமார் மீது பொதுச் சொத்து சேதப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன் பேரில் நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சதீஷ்குமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் கோரிக்கையை தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
TVK Namakkal Sathish TN Police Karur incident