திடீர் மரணம்.. வேதனையில் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.!!
ttv dinakaran tweet for pudukottai gun fire death
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் (CISF) துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டடிபட்ட சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
சிறுவனை இழந்து வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி ஒரு சம்பவம் இப்படி அங்கே நடக்காதவாறு உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்திடவேண்டும். அதோடு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dinakaran tweet for pudukottai gun fire death