3 நாட்களுக்கு பயிற்சி! தேர்தல் பயிற்சிக்கு களமிறங்கும் திமுகவினர்...!
Training for 3 days DMK members gearing up for election training
தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள், அண்ணா அறிவாலயத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற தலைமை பயிற்றுனர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜா பேட்டியளித்தார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவது,"தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பயணம் நேற்று தொடங்கியது. இந்த பயணத்தில் 234 தொகுதிகளிலும் இருந்து எங்களது அணியைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
அடுத்ததாக இந்த 234 பேரும் நாளை (வெள்ளிக்கிழமை) 27-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுப்பர்.இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஜூலை 1-ந்தேதி உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை முதலமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஜூலை 2-ந்தேதி இந்த பணியை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்வர். ஜூலை 3-ந்தேதி இது மாபெரும் இயக்கமாக மேற்கொள்ளப்படும். இதுபோன்ற முயற்சி இதுவரை இந்தியாவில் எந்த கட்சியிலும் நடந்தது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Training for 3 days DMK members gearing up for election training