தமிழக மக்களிடம் பா.ஜ.கவிற்கு ஆதரவு அதிகரிப்பு... -  பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் பேச்சு! - Seithipunal
Seithipunal


சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் வடசென்னை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர், வட சென்னை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளர் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருப்பதாவது, 

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜகவிற்கு மிகச் சிறப்பான ஆதரவு கிடைக்கிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் இடையே ஆதரவு அதிகரித்துள்ளது. 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தரும்போது பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர். 

தமிழ்நாட்டில் பாஜகவில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிக அளவில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். 

பிரதமர் மோடியின் வாகன பிரசாரத்தின் போது விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN people support increased bjp


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->