அனைத்து அரசு பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.! தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு.!
tn cm order feb 25
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வெளியான அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் , பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58 -லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது.
அரசு பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படுகிறது.
இந்த உத்தரவு , அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.