'பனையூர் தொகுதி இல்லைனு கூட தெரியாத சின்ன பிள்ளைகள்'; தவெக விருப்பு மனு வழங்கலை கிண்டலடித்த சீமான்...! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்ட நிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் பாப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. அத்துடன், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.  

இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்பமனு கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பட்ட நிலையில், அதற்கு அவர்,  "தவெகவில் இருப்பது சின்ன பிள்ளைகள். பனையூர் தொகுதி இல்லைனு அவங்களுக்கு தெரியல. விற்பனை பண்டம் போல நினைத்து விருப்ப மனு வாங்கியுள்ளனர்'' என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those in the TVK are like little children mocked Seeman


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->