திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
thirupurankundram case court madurai
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்ற தனிநபர்களுக்கு அனுமதி அளித்து, 144 தடை உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை மதுரை மாநகரக் காவல்துறை நேற்று (டிச. 4) இரண்டாவது நாளாகவும் அமல்படுத்தாததால், இந்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தனி நீதிபதியின் மறு உத்தரவும் காவல்துறையின் மறுப்பும்
விசாரணை: தனது உத்தரவை அமல்படுத்தாதது குறித்துக் கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், காணொலியில் ஆஜரான மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டார்.
கமிஷனர் விளக்கம்: சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவை அமல்படுத்தியதாலேயே மலையேற அனுமதிக்கவில்லை என்று கமிஷனர் விளக்கம் அளித்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு: இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தியுள்ள 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது," என்று உத்தரவிட்டார். மேலும், நேற்று இரவு 7 மணிக்குள் மனுதாரர் உள்ளிட்ட 10 பேர் குழுவினரைத் தீபமேற்ற அனுமதித்து, உரிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
மீண்டும் அனுமதி மறுப்பு: ஐகோர்ட் உத்தரவு நகலுடன் மனுதாரர் குழுவினர் சென்றபோது, போலீஸார் மலைக்கான படிக்கட்டை வாகனங்களைக் குறுக்காக நிறுத்தியும், இரும்புத் தடுப்புகளை அமைத்தும் மறித்தனர். இதனால், இரண்டாவது நாளாகவும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (டிச. 5) மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.ஐ.எஸ்.எஃப். படைக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அடுத்தகட்ட விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
மாவட்ட ஆட்சியர் சார்பில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
English Summary
thirupurankundram case court madurai