#BigBreaking || எல்லாரையும் ராஜினாமா செய்ய சொல்லுங்க., போர்க்கொடி தூக்கும் திருமாவளவன்.! கூட்டணி தர்மத்தை காப்பாத்துங்க.! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தை கட்சி :

தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்  திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற திமுகவினரை ராஜினாமா செய்து செய்ய வைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, கூட்டணி அறத்தை திமுக தலைவர் ஸ்டாலின் காத்திட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan say about dmk victory march


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->