பிரசார மேடையில் செருப்பை கழட்டி காட்டி, மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நா.த.க.,கொள்கை பரப்பு செயலாளர்..! - Seithipunal
Seithipunal


பிரசார பொதுகூட்டத்தில், நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலர், செருப்பை எடுத்து காட்டி எச்சரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, குமலன்குட்டையில் நேற்று முன்தினம் இரவு பொது கூட்டம் நடந்தது.

இதன் போது அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, ''ஈ.வெ.ரா., இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் இருந்த, 60 பெண் புலவர்களை படிக்க வைத்தார். திருக்குறளை எழுதும்போது உடைந்த எழுத்தாணிக்கு பதில் புதிய எழுத்தாணியை கொடுத்து எழுத வைத்தார்.

''தொல்காப்பியம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, அகநானுாறு, புறநானுாறு தந்தவர்களை உருவாக்கினார் என்று யாராவது கூறினால், பிஞ்ச செருப்பை எடுத்து அடிப்பேன்,'' என, பேசியபடியே, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி காட்டி, பேச்சை தொடர்ந்தார்.

இவர் இவ்வாறு மேடையில் செருப்பை எடுத்து காட்டியதுடன், 'அடிப்பேன்' என பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Policy Secretary of the Naam Tamilar Katchi took off his sandals on the campaign stage


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->