நீதிக்கு நன்றி! பெண்களுக்கு எதிரான செயலை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது...! - கமலஹாசன்
Thank you for justice Crimes against women can never be tolerated Kamal Haasan
சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, ரூ.90000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் நீதிமான்றத்தால் உத்தரவிடப்பட்டது.இச்சுழலில், தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு, தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன்.
பெண்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாது.
அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையிலான தண்டனை தரப்படும் என்னும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Thank you for justice Crimes against women can never be tolerated Kamal Haasan