பாஜகவுக்கு எதிராக தேசியக்கட்சியை தொடங்குகிறார் - தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்.! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராக விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில், விரைவில் தேசிய கட்சி தொடங்கப் போவதாக நேற்று அவர் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தெலுங்கானா இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு செய்ததுபோல், அறிவுஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். 

அதில், தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana CM Chandrasekhar Rao is launching the National Party against the BJP


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->