அதிரடி நியூஸ்! 11 நகராட்சிகள் தரத்தை உயர்த்திய தமிழக அரசு...!
Tamil Nadu government raises the standards of 11 municipalities
நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில், தமிழகத்தில் உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

அவ்வகையில், உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், அரியலூர், மாங்காடு, வெள்ளக்கோவில், குன்றத்தூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால் பெருமளவு வளர்ச்சி இம்மாவட்டங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu government raises the standards of 11 municipalities