எல்லா நீதிமன்றத்திலும் தடை வாங்குங்க.. உதயநிதியை சாடிய உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு, மலேரியா போன்று சமாதான தர்மமும் அழிக்கப்பட வேண்டும் என பேசியதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில் சமாதான பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது "அமைச்சராக இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசினால் என்ன நடக்கும் என்று தெரியாதா? 

அந்தந்த நீதிமன்றங்களுக்கு சென்று தடை உத்தரவை பெறுங்கள். நடக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள்"என நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தனர். 

அதற்கு உச்ச மன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஆஜான வழக்கறிஞர் நுபுர் சர்மா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை போல அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றங்களிலிருந்து சம்மன் அழைக்கப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக உதயநிதி தரப்பு பதில் அளித்தது. அதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court slammed Udayanidhi in Sanatana case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->