மாநிலங்களவையில் பாஜகவின் பலம் கூடியது: 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
Sena of Seven AAPs Rajya Sabha Strength Crumbles as 7 MPs Officially Merge with BJP
டெல்லி அரசியலில் ஏற்கனவே பல சவால்களைச் சந்தித்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP), இன்று (ஏப்ரல் 27, 2026) நாடாளுமன்ற அளவில் ஒரு மிகப்பெரிய பேரிடி விழுந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 7 முக்கிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
யார் அந்த 7 எம்பிக்கள்?
அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்ட கீழ்க்கண்ட தலைவர்கள் தற்போது காவி முகாமிற்கு மாறியுள்ளனர்:
ராகவ் சத்தா
ஹர்பஜன் சிங்
ஸ்வாதி மாலிவால்
அசோக் மித்தல்
சந்தீப் பாடக்
ராஜேந்திர குப்தா
விக்ரம் சஹ்னி
இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையே தங்களை பாஜக எம்பிக்களாகக் கருத வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி குழுத் தலைவர் சஞ்சய் சிங் கொடுத்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, இந்த இணைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தலைகீழாக மாறிய பலப்பரீட்சை
இந்த அதிரடி மாற்றத்தால் மாநிலங்களவையின் பலம் கணிசமாக மாறியுள்ளது. பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்திருப்பது, இனி மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அக்கட்சிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும். அதே நேரத்தில், 10 எம்பிக்களுடன் கம்பீரமாக இருந்த ஆம் ஆத்மி, தற்போது வெறும் 3 உறுப்பினர்களுடன் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது.
ஒரே நேரத்தில் 7 எம்பிக்கள் கட்சி மாறியிருப்பது, ஆம் ஆத்மியின் உட்கட்சிப் பூசலையும், அக்கட்சித் தலைமை மீதான அதிருப்தியையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, ராகவ் சத்தா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற பிரபல முகங்கள் வெளியேறியிருப்பது தேசிய அளவில் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
Sena of Seven AAPs Rajya Sabha Strength Crumbles as 7 MPs Officially Merge with BJP