பெருங்களத்தூர் அருகே பயங்கரம்! ஓடும் மின்சார ரயில் மீது கல்வீச்சு...! - பயணிக்கு நேர்ந்த விபரீதம்...!
Terror near Perungalathur Stones thrown moving electric train Tragedy befalls passenger
சென்னையில் புறநகர் மற்றும் அதிவேக ரெயில்கள் மீது கல்வீசும் ஆபத்தான சம்பவங்கள் இடையிடையே நடைபெற்று, பயணிகள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரக்கரமான செயல்கள், பயணிகளின் உயிர் பாதுகாப்பையும் ரெயில்வே சொத்துகளையும் நேரடியாக பாதிக்கும் வகையில் உருவெடுத்து வருகின்றன.

குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மர்ம நபர்கள் மற்றும் சில சிறுவர்கள் தண்டவாளம் அருகிலுள்ள கற்கள், பாட்டில்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, வேகமாக செல்லும் ரெயில்களை நோக்கி வீசுவது அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் பதட்டத்துடனும், அச்சத்துடனும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் ரெயில்வே பாதுகாப்பு படை எச்சரித்து வருகிறது.
இருந்தபோதிலும், இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தாம்பரம் அருகே பெருங்களத்தூர்- தாம்பரம் இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பார்த்திப கண்ணன் (26) என்ற பயணியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் ரெயில்வே காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Terror near Perungalathur Stones thrown moving electric train Tragedy befalls passenger