'திரையுலகில் நிறைய பேர், புகழ் பெற்றவர்கள் என பலர் போதை பொருள் பயன்படுத்துகின்றனர்': சீமான் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


''திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர். புகழ் பெற்றவர்கள் பயன்படுத்துகின்றனர்'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: முருகனை தொட்டதே ஒரு அரசியல் தான்.  முருகன் மாநாடு, பக்தர்கள் மாநாடு ஆன்மிகம் எல்லாமே அரசியல் இல்லையா..? தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும்போது தொடுவதற்கு என்ன காரணம் என கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போது மாநாடு போட்டவர்கள், இதே மாநாட்டை அடுத்தாண்டு போடுவார்களா என்று கேட்கவேண்டும் என்றும்,  ஆண்டுதோறும் இதே போன்று மாநாடு போட்டால், அது அரசியல் இல்லை, ஆன்மிகம் என்றும், தேர்தலில் ஓட்டு வரவில்லை என்றால், இது பயனில்லை என்று விட்டு விடுவார்கள். அடுத்தாண்டு போடட்டும். அரசியலா, இல்லையா என பார்ப்போம் என்று முருக பக்தர்கள் மாநாடு குறித்து பேசியுள்ளார்.

அத்துடன், விவசாயிகளின் குறைகளை ஆட்சியாளர்கள் என்றைக்கும் கேட்டது கிடையாது என்றும், வெள்ள பாதிப்பின் போது நிவாரணம் கேட்ட விவசாயிகள் போராடி உள்ளதாகவும், வலி வரும்போதும், துயரம் வரும் போதும் தெருவில் நின்று போராடுவது , பிறகு துன்பத்தை துயரத்தை நம்முயை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது உரிமைக்கு நிற்காத அரசுகளுக்கு மீண்டும் ஓட்டு போட்டு அதிகாரம் அளிப்பது மிகப்பெரியதவறு. இனியாவது விழிப்புற்று எழ வேண்டும். இல்லை என்றால் கடினம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போதை பொருள் வழக்கில் தொடர்பில் கைதான ஸ்ரீகாந்த் பாவம். திரையுலகிலும், புகழ் பெற்றவர்கலும் போதை பொருள் பயன்படுத்துகின்றனர். அனால் இவர் அவர் சிக்கிகொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போதை பொருள் வராது. நீண்ட நாட்களாக இருக்கிறததாகவும், நாடெங்கும் போதை பொருள் இருக்கிறது. தற்போது, திரையுலகில் மட்டும் அல்ல. பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலேயும், வழிபாட்டு தலங்களிலும் பொதி பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நினைத்தால் போதைப் பொருள் ஒழிந்துவிடும் என்றும், ஸ்ரீகாந்த் புகழ்பெற்ற நடிகர் என்பதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும்,  அவர் கைதாகவில்லை என்றால் விற்பனை தொடரும் என்றும், அதனை தடுக்க ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டும். ஆனால், நினைக்க மாட்டார்கள் என்று சீமான் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman shockingly reports that many people in the film industry including celebrities use drugs


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->