பாதுகாப்பு காரணமா? அரசியல் பயமா? மோடி வராத மக்களவை...! - ராகுல் காந்தி தாக்கு
security reasons Or due political fear Lok Sabha that Modi does not attend Rahul Gandhi attacks
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் சூடுபிடித்த அரசியல் களமாக மாறியது. சீனா தொடர்பான விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தி பேசத் தொடங்கியதும், பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது.

தொடர்ந்து ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தால் அவரின் பேச்சு பலமுறை தடைபட்டது.இதற்கிடையில், பிரதமர் மோடி தீர்மானத்திற்குப் பதிலளிக்க அவைக்கு வரத் தயாராக இருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அவரது இருக்கையைச் சூழ்ந்து கொண்டு முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அவையின் பாதுகாப்பும் கண்ணியமும் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில், பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். அதன் விளைவாக, பிரதமர் இல்லாத நிலையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்த விவகாரத்துக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “பிரதமருக்கு எவ்வித மிரட்டலும் இல்லை.
உண்மையில் நான் எழுப்பிய கேள்விகளைச் சந்திக்கத் தயங்கியதால்தான் அவர் அவைக்கு வரவில்லை” என்று குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் அரசியல் வெப்பநிலையை மேலும் உயர்த்தியுள்ளது.
English Summary
security reasons Or due political fear Lok Sabha that Modi does not attend Rahul Gandhi attacks