அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின்! - Seithipunal
Seithipunal


சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் உரையாற்றிய ராகுல் காந்தி, வி.டி. சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  

பின்னர், இந்த வழக்கு புனே எம்.பி., எம்எல்ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராகுல் காந்தி காணொளி மூலமாக ஆஜரானார். அப்போது அவரிடம் உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம், ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், இவ்வழக்கு மீண்டும் பிப்ரவரி 18 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நிரந்தர ஆஜர் விலக்கு அளித்துள்ளதாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savarkar rahulgandhi case bail


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->