அதிமுகவில் மீண்டும் பரபரப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த சசிகலா.!!
sasikala warning for edappadi palanisamy
சசிகலா கழகத் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதை நம் இயக்கத்தின் இருபெரும் தலைவர்களும் நிரூபித்து சென்றுள்ளார்கள். இந்த இயக்கத்தின் வேர்களாகவும், விழுதுகளாகவும் விளங்கும் அடிப்படைத் தொண்டர்களின் வாழ்வு மலரவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயரவும், எஞ்சியுள்ள என் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிக்கிறேன்.
கழகத் தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம், நம் புரட்சி தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கி விட்டது. நம் புரட்சித்தலைவர் அவர்கள் தொண்டர்களை இயக்கத்தின் மறு உருவமாக கருதினார். எங்கு, எந்த மேடையில் பேசினாலும் “என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே" என்றுதான், தன் இறுதிமூச்சு வரை நம் தொண்டர்களை அழைத்தார்.
ஒரு ஐந்து பேர் கூடி முடிவெடுத்து தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கியதை மனதில் வைத்துதான், அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவரால்தான், தனது கட்சியை சிறப்பாக வழி நடத்த முடியும் என்று கருதிய நம் புரட்சித்தலைவர், இதற்காகத்தான் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற தனித்துவமான ஒரு சட்ட விதியை நாட்டிலே வேறு எந்த கட்சியிலும் இல்லாத ஒரு விதியை தனது கட்சிக்காக உருவாக்கினார். அதுபோன்று, நம் அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் தலைமையால் தான், நம் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதியே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். இதை குறிப்பிடும்போது, நம் புரட்சித்தலைவர் ஒரு கழக நிகழ்ச்சியில் அன்றைக்கு பேசியதை, இன்று நான் அனைவருக்கும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
மிகப் பெரிய பொறுப்பை ஏற்கும் பொது செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவது எப்படி தவறாகும். எந்த பதவியும் பெறாத தொண்டர்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கூட இல்லாமல்.
வேலைக்காரனாய்,
எடுபிடியாய்
வால்பிடிப்பவளனாய்,
அடுமையாய்
ஏவவாளனாய் இருக்கத்தான் வேண்டுமா?
நல்லதா, கெட்டதா என்று சீர்த்தூக்கி பார்ப்பது முதற்கடமை. நல்லதென்றால் அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வழிமுறைகளைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும்.
நம் புரட்சித்தலைவர் அன்றே திர்க்கதரிசனமாக சொல்லி சென்றதை நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் கடைபிடித்தால்தான் நம் இயக்கம் நிலைக்கும். இதை மனதில் வைத்துதான் நம் புரட்சித்தலைவியும் எத்தனை நூறாண்டானாலும் கழகம் மென்மேலும் வளரும் என்று சூளுரைத்தார். நம் இயக்கத்தன் இருபெரும் தலைவர்களும், நம்மை விட்டு மறைந்த மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் கழகத் தொண்டர்களும், நம் தலைவர்களின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் வருத்தமுடன் தவிக்கின்ற வேளையில், இது போன்று நிகழ்வுகளை கழகத்தினர் நடத்த இட்டமிடுவது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயல் ஆகும். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
குறிப்பிட்ட ஓரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதையும், அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும், இயக்கத்தின் ஆணிவேராக இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்கள் இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். இது போன்று, ஒரு சிலரால் கட்௫ிக்கு ஏற்படும் ஆபத்தை மனதில் வைத்துதான், அன்றைக்கே நம் புரட்சித்தலைவர் அவர்கள்,
“தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ.. அதைக் கேள்வி கேட்க ஆள் இல்லாமல் பார்த்து நிற்பதோ" என்று தன் பாடல் வாயிலாக நமக்கெல்லாம் எச்சரித்து சென்றுள்ளார். நம் புரட்சித்தலைவரும், நம் புரட்சத்தலைவியும் என்றைக்கும் நம்மோடு இருக்கிறார்கள், கலங்க வேண்டாம். கழகம் என்றைக்கும் தோற்று போக விடமாட்டேன். இது உறுது. எந்த ஒரு செயலானாலும் எல்லோரும் ஒன்றிணைந்து, மூழ்ச்சியோடு
அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெறும் போதுதான், அந்த செயல் தறப்பானதாக இருக்கும். உதாரணமாக, ஒரு திருமணம் என்றால் கூட அது எவ்வாறு நடக்கவேண்டும் என்றால், உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவருக்கும், முன்னதாகவே அழைப்பிதழ் அனுப்பி, எல்லோரையும் கலந்துக்கொள்ள செய்து, அனைவரது வாழ்த்துக்களோடும், ஆசிர்வாதத்தோடும் ஒரு திருமணம் நடைபெற்றால்தான் அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த மணமக்களும் தங்கள்வாழ்க்கையில் மேண்மையடைவார்கள். அது போன்று இல்லாமல், யாருக்கும் தெரியாமல், உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவரையும் உதறிதள்ளிவிட்டு அனைவரது எதிர்ப்புகளையும் மீறி இடீரென்று ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு, மணமகன், மணமகள் வீட்டிற்கு செல்வதும், மணமகள், மணமகன் வீட்டிற்கு செல்வதும் நகைப்புக்குரிய செயலாகத்தான் அமையுமே தவிர யாருமே ரசிக்கமாட்டார்கள்.. இது போன்று ஒருவரையும் மதிக்காமல் யாருடைய ஆசிர்வாதமும் இல்லாமல் இருமணம் நிகழ்ந்தால், அதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், இதனால் அவர்களுக்கு எந்தவிதத்திலும் மகிழ்ச்சியும் ஏற்படாமல், நிலையான வாழ்க்கையும் அமையாமல், இறுதியில் அனைவராலும் ஒதுக் வைக்கப்படும் நிலை தான் ஏற்படும். மேலும், இது போன்ற துர்பாக்கெய நிலையைக் கண்டு அனைவரும் பரிதாபப்படுவார்களே தவிர யாரும் பொறாமை கொள்ளமாட்டார்கள்.
நம் புரட்சித்தலைவரின் எண்ணத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், நம் அடிப்படைத் தொண்டர்கள் பலனடையும் வகையிலும், நம் புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல், இதற்கு வலுசேர்க்கும் வேலைகளை முதலில் செய்வதுதான் இன்றைக்கு நமது முதல் கடமையாக கொண்டு, ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம். இந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை கண் அயராது, ஓய்வின்றி உழைப்போம், உழைப்போம் என்று அனைத்து அடிமட்ட தொண்டர்களையும் அன்போடு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sasikala warning for edappadi palanisamy