ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பெரும் விடுதலை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து. மேல்முறையீட்டு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து 2000-ம் ஆண்டு கருணையின் அடிப்படையில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாததால் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ல் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதே சிறப்பு அதிகாரத்தின் கீழ் தங்களையும் விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன், நளினி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RajivGandhi murder case Supreme Court  


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->