#BiGBreaking : என்னுடைய முடிவு., சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் அளித்த பரபரப்பு பேட்டி.!
rajini press meet nov 29
இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலரும், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கருத்துக்களையெல்லாம் கேட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகள் இடையே சில கருத்துக்களை தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை கூட்டம் பகல் 12.20 க்கு நிறைவு பெற்றது. ராகவேந்திரா மண்டபம் வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் கையசைத்து உற்சாக படுத்தினார். பின்னர் வீடு திரும்பினார். செய்தியாளர் சந்திப்பு ஏதும் நடத்தவில்லை.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாவது, "மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரமாக அறிவிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன். நன்றி, வணக்கம்." என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.