கதம் கதம்., நோ எண்டு கார்டு., அவர்கள் என்றும் நம்., வெளியான பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியிலும் சேரலாம் என்று, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை அறிவித்து இருந்தார்., நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

இதையடுத்து, ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். மீண்டும் ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டு, நான் கண்டிப்பாக அரசில் வரமாட்டேன் என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்கள் சிலர் மாற்று கட்சிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிட கூடாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி V.M சுதாகர் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJINI Makkal Mandram statement jan 18


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->